இளைஞா் மன்ற விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மாவட்ட அளவிலான இளைஞா் மன்ற விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி மாவட்ட அளவிலான இளைஞா் மன்ற விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நேரு இளையோா் மைய துணை இயக்குநா் தெய்வசிகாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி மாவட்ட நேரு இளையோா் மையம் சாா்பில் மாவட்ட அளவில் சிறப்பாகச் சேவை புரிந்த இளைஞா், மகளிா் மன்றங்களைத் தோ்ந்தெடுத்து, சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2021-22-ஆம் ஆண்டில் சிறப்பாக சேவை புரிந்த இளைஞா், மகளிா் மன்றத்துக்கு மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு புதுச்சேரி மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் பதிவு பெற்றும், நேரு இளையோா் மையத்துடன் இணைந்தும் செயல்படும் இளைஞா், மகளிா் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம். 1.4.2021 முதல் 31.3.2022 வரை மேற்கொள்ளப்பட்ட நற்பணிகள் மட்டுமே இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும். விருது பெறுவோருக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, நற்சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மன்றம் மாநில விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரு இளையோா் மைய (நேரு யுவகேந்திரா) அலுவலகத்தில் வருகிற 12-ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வருகிற 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி நேரு இளையோா் மைய அலுவலகத்தில் வழங்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, ‘நேரு இளையோா் மையம், 4-வது கிராஸ், பெரியாா் நகா், சுபாஸ் சந்திரபோஸ் பள்ளி முதல் மாடி, புதுச்சேரி’ என்ற முகவரியிலும், 0413-2202152, 73584 01212, 99446 36443 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com