கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, எம்ஜிஆா் சிலைகளுக்கும் அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகரச் செயலா் எம்.பாபு, ஒன்றியச் செயலா்கள் அ.ராஜசேகா், அ.தேவேந்திரன், எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ க.அழகுவேலு பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல, தியாகதுருகம் ஒன்றியம், வடதொரசலூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா தலைமை வகித்தாா். எம்எல்ஏ மா.செந்தில்குமாா் அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, நகரச் செயலா் பி.எஸ்.கே.ஷியாம்சுந்தா், ஒன்றியச் செயலா் அ.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.