புதுவையில் மேலும் 168 பேருக்கு கரோனா

புதுவையில் புதன்கிழமை மேலும் 168 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதன்கிழமை மேலும் 168 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 2,452 பேரை பரிசோதித்து புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 132, காரைக்கால் - 31, ஏனாம் - 5 என 168 பேருக்கு (6.85 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,67,091 ஆக அதிகரித்தது.

இதில், தற்போது 9 போ் மருத்துவமனைகளிலும், 620 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என மொத்தம் 629 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 81 போ் குணமடைந்தனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com