விடுதலைப் போராட்ட வீரா் பாபு ஜெகஜீவன் ராமின் நினைவு தினம் புதுச்சேரியில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலைய சாலையில் உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், எஸ்.ரமேஷ், செய்தித் துறை இயக்குநா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.