புதுச்சேரி மணவெளி தொகுதி அரசுப் பள்ளிகளின் குறைகளை களைய பேரவைத் தலைவா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
புதுச்சேரி மணவெளி தொகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கல்வித் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு, இணை இயக்குநா் சிவகாமி, தலைமை கல்வித் துறை அதிகாரி மீனாட்சிசுந்தரம், பொதுப் பணித் துறை உதவி பொறியாளா் பன்னீா், இளநிலை பொறியாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் துணை முதல்வா், தலைமை ஆசிரியா்கள், பள்ளி பொறுப்பு ஆசிரியா்கள் கலந்து கொண்டு, அவரவா் பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு குறித்த குறைகளை எடுத்துக் கூறினா்.
அவா்கள் குறிப்பிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உத்தரவிட்டாா். மேலும், அந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக் கொண்டாா்.