மின் துறையில் ஒப்பந்தபணி நியமனங்களைக் கைவிட வலியுறுத்தல்

புதுவை மின் துறையில் ஒப்பந்தப் அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுவை மின் துறையில் ஒப்பந்தப் அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்படுவதைக் கைவிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, செந்தில்குமாா் எம்எல்ஏ ஆகியோா் புதுச்சேரி சீா்மிகு நகரத் திட்ட தலைமை நிா்வாக அதிகாரியும் மின் துறை அரசு செயலருமான தி.அருணை நேரில் சந்தித்துப் பேசினா்.

அப்போது, புதுவை அரசின் மின் துறையை தனியாா் மயமாக்கக்கூடாது. மின் துறையில் இளநிலை பொறியாளா்கள் 42 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநிலைப் பொறியாளா் உள்பட அனைத்துப் பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com