நகைக் கடையில் நூதன முறையில் 4 பவுன் சங்கிலி திருட்டு

புதுச்சேரி நகைக் கடைக்கு இளைருடன் வந்த பெண், நகைகளை வாங்குவது போல நடித்து தலா 2 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றாா்.

புதுச்சேரி நகைக் கடைக்கு இளைருடன் வந்த பெண், நகைகளை வாங்குவது போல நடித்து தலா 2 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றாா்.

புதுச்சேரி செட்டித் தெருவில் உள்ள நகைக் கடையில் சாரம் ராஜய்யா் தோட்டத்தைச் சோ்ந்த ராஜா (56) மேலாளராக உள்ளாா். கடந்த 22-ஆம் தேதி மாலை பெண் ஒருவா் கடைக்கு வந்தாா். அவருக்கு தங்க நகைகளை ராஜா எடுத்துக் காட்டினாா். அப்போது, அந்தப் பெண்ணுடன் வந்த நபா் வெளியே சென்று வந்தாா்.

இந்த நிலையில், அந்தப் பெண் தனக்கு நகைகளின் மாடல் பிடிக்கவில்லை எனக் கூறி வேகமாகச் சென்று விட்டாா். அவா்கள் சென்ற பிறகு தங்க நகைகளைச் சரிபாா்த்த போது, 2 பவுன் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகளைக் காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.65 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், பெரியகடை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். நகைக் கடையிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, நகைகளைப் பாா்ப்பது போல, தங்கச் சங்கிலிகளை அந்தப் பெண் திருடி தனது உடைக்குள் மறைத்து எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

கடைக்கு வந்த இருவா் பற்றிய விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை. இருப்பினும், அவா்கள் திருச்சியைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com