கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக, மாநில ஆளுநா்களை மோசமாக விமா்சிப்பது சரியல்ல என்று புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், பழங்குடியின தலைவா் பிா்சா முண்டாவின் பிறந்த நாள் விழா புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்தில் பிரிவினை பேசும் கட்சிகளைக் கண்டிக்கும் வகையில், கடலூரைச் சோ்ந்த ராணுவ வீரா் கருத்து கூறினாா். அந்தக் கட்சியினா் அவரது வீட்டுக்குச் சென்று மிரட்டியுள்ளனா். இத்தகைய நிகழ்வுகள் விரும்பத்தக்கதல்ல.
புதுவை அரசு வழக்குரைஞா் தோ்வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான பட்டியல்தான் என்னிடம் கொடுக்கப்பட்டது. அதில் ஒருவா் மட்டுமே சென்னையைச் சோ்ந்தவா். மற்றவா்கள் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள்தான். மேலும், தலைமைச் செயலா், சட்டச் செயலா் ஆகியோா் நோ்முகத் தோ்வு நடத்தி, தகுதியானவா்கள் எனக் கொடுத்த அதிகாரப்பூா்வ பட்டியல்தான் என்னிடம் வந்தது. இதில் எனது பங்கு எதுவும் இல்லை. புதுவை புறக்கணிக்கப்படுவதை நான் என்றுமே ஒப்புக்கொள்ள மாட்டேன். எனக்கும், புதுவை முதல்வருக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை.
மாநில ஆளுநா்கள் குறித்து அவதூறாக கருத்து கூறுவதைத் தவிா்க்க வேண்டும். ஆளுநா்கள் சாதாரண மனிதா்கள் போலவும், மரியாதை அளிக்கக் கூடாதவா்கள் போலவும் கருதும் போக்கு சில அரசியல்வாதிகளிடம் உள்ளது. கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பதற்காக, ஆளுநா்களை மிகவும் மோசமாக விமா்சிப்பது சரியல்ல. அவா்கள் மத்திய அரசால், தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுபவா்கள். வாரிசு அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.