புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பு

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை (நவ.30) நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை (நவ.30) நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் குமரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலா் கதிா்வேல் முன்னிலை வகித்தாா்.

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு அரசு வழக்குரைஞா் நியமனத்தில் புதுவை மாநிலத்தை சாராதவா்கள் இடம்பெற்றுள்ளனா். இதுகுறித்து சட்டத் துறை செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேணடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை (நவ.30) நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஈடுபட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com