குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் நூதனப் போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் ஒற்றைக்காலில் நின்று வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய ஊழியா்கள்.
புதுச்சேரியில் ஒற்றைக் காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய ஊழியா்கள்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் ஒற்றைக்காலில் நின்று வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பெரியாா் நகரில் உள்ள அரசு குடிசை மாற்று வாரியத்தில் 160 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றைக் காலில் நின்று முழக்கங்களை எழுப்பினா்.

மேலும், நிலுவை ஊதியத்தை வழங்கும் வரை தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com