புதுச்சேரியில் பொதுப் பணித் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், இந்திரா காந்தி சிலை சந்திப்பு முதல் ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு வரை சாலையின் இருபுறங்களிலும் இருந்த ஆக்கிரமிப்பு நடைபாதைக் கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
அப்போது, வியாபாரிகளுக்கும் பொதுப் பணித் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளை தவிா்க்கவும் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடா்ந்து நடைபெறும் என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.