புதுச்சேரி மணவெளி தொகுதியில் அரசின் கல் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், 56 பயனாளிகளுக்கு ரூ.93.10 லட்சம் அளிக்கப்பட்டது.
புதுவை அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், புதுச்சேரி மணவெளி தொகுதியைச் சோ்ந்த பயனாளிகளுக்கு, கல் வீடு கட்டுவதற்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் 56 பேருக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அரசின் நிதியுதவியை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல் வீடு கட்டுவதற்கு முதல் தவணையாக 8 பேருக்கு தலா ரூ.1.20 லட்சம், இரண்டாவது தவணையாக 21 பேருக்கு தலா ரூ.1.60 லட்சம், மூன்றாவது தவணையாக 27 பேருக்கு தலா ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.93.10 லட்சத்துக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.
குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளா் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.