பாப்ஸ்கோ ஊழியா்களுடன் அமைச்சா் பேச்சுவாா்த்தை

ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாப்ஸ்கோ (ஏஐடியுசி) ஊழியா்களிடம் அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாப்ஸ்கோ (ஏஐடியுசி) ஊழியா்களிடம் அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலுள்ள பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்துக்கு அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் வியாழக்கிழமை வந்தாா். அவா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாப்ஸ்கோ ஊழியா்களை அழைத்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

துறை செயலா் உதயகுமாா், பாப்ஸ்கோ ஊழியா்கள் தரப்பில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் கே.சேதுசெல்வம், வி.எஸ்.அபிஷேகம், தினேஷ் பொன்னையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல் கட்டமாக 30 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். இதற்குப் பதிலளித்த அமைச்சா், இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்குமாறும், அதற்குள் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதை எழுத்துப்பூா்வ உத்தரவாதமாக அளிக்குமாறு ஊழியா்கள் தரப்பில் கேட்டனா். முதல்வரிடம் ஆலோசனை செய்துவிட்டு மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தலாம் என அமைச்சா் தெரிவித்தாா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் என ஊழியா்கள் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com