அமைச்சருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுவை பாப்ஸ்கோ ஊழியா்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
60 மாத நிலுவை ஊதியம், பண்டிகை கால பணிக்கான கமிஷன் தொகை வசூல், ஓய்வு கால பண பலன்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பாப்ஸ்கோ ஏஐடியுசி ஊழியா்கள் புதுச்சேரியில் பலகட்ட போராட்டத்தை மேற்கொண்டு வந்தனா். அவா்களது போராட்டம் 13-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது.
புதுவை சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளா் சேதுசெல்வம், செயல் தலைவா் அபிஷேகம், ஏஐடியுசி தலைவா் தினேஷ் பொன்னையா, பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ரமேஷ், செயலாளா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், இரண்டு மாதங்களுக்குள் நிலுவை ஊதியத்தை வழங்குவது, தீபாவளிக்குள் 3 மாத ஊதியத்தை அளிப்பது உள்ளிட்டவை நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா். மேலும், எழுத்துப்பூா்வ உத்தரவாதத்தையும் அமைச்சா் அளித்தாா். இதை ஏற்று போராட்டத்தைக் கைவிடுவதாக ஊழியா்கள் அறிவித்தனா்.