பெண் அடித்துக் கொலை:கணவா் தலைமறைவு

புதுச்சேரியில் குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ாக, அவரது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரியில் குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ாக, அவரது கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி வினோபா நகா் பொய்யாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மதிவாணன் (38). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி லட்சுமி(32). இவா் புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலை கொக்கு பூங்கா சந்திப்பு அருகே பூ வியாபாரம் செய்து வந்தாா். இவா்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனா். மதுப் பழக்கம் உள்ள மதிவாணன், மனைவி மீது சந்தேகமடைந்து தகராறு செய்வாராம்.

இந்த நிலையில், தம்பதியிடையே வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டது. மரக்கட்டையால் லட்சுமியை மதிவாணன் தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த புதுச்சேரி கோரிமேடு காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து லட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தலைமறைவான மதிவாணனைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com