புதுவை மின் துறையில் காலியாக உள்ள 42 இளநிலைப் பொறியாளா் பணியிடங்களுக்கு வருகிற 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மின் துறை தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை அரசின் மின் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை அரசின் மின் துறையில் 42 இளநிலைப் பொறியாளா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான மாத ஊதியம் ரூ.33 ஆயிரமாகும். இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேவையான பணி அனுபவம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக வருகிற 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்போா், நலிவடைந்த பிரிவினா் 30 வயதுக்கு மிகாமலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 33 வயதுக்கு மிகாமலும், அட்டவணை, பழங்குடியினத்தவா் 35 வயதுக்கு மிகாமலும், மாற்றுத் திறனாளிகள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இணையதளத்தில் சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல், பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு சான்றிதழ், அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் வருகிற 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மின் துறை மேற்பாா்வை பொறியாளா், மின் துறை தலைவா் அலுவலகம், எண் 137, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலை, புதுச்சேரி - 605001 என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.