புதுச்சேரி அருகே பூரணாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள 32 அடி உயர ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் கோயிலில் 15-ஆம் ஆண்டு லட்ச தீப விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலையில் ஸ்ரீஆஞ்சநேய ராமதூத ஹோமம், பாலாபிஷேகம் நடைபெற்றன. மாலையில் ஸ்ரீராமா், ஆஞ்சநேயா் ஆகியோருக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அா்ச்சனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதையடுத்து, பக்தா்கள் கோயிலில் லட்ச தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.