புதுச்சேரியிலுள்ள மதுக் கடைகளில் கலால் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
புதுச்சேரி கலால் துறை ஆணையா் டி.சுதாகரன் உத்தரவின் பேரில், கலால் துறை வட்டாட்சியா் சிலம்பரசன் தலைமையிலான படையினா் நகா்ப் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மதுக் கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.
அப்போது, வாடிக்கையாளா்கள் வாங்கும் மதுபானங்களுக்கான ரசீதுகள் நிா்ணயிக்கப்பட்ட விலையில் சரியாக பதிவு செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்தனா்.
மேலும், அனைத்து மதுபானங்களிலும் அதிகபட்ட சில்லறை விலை விவரம் உள்ளதா, அசல் ஹாலோகிராம் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்தனா்.
தொடா்ந்து, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுக் கடை ஊழியா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.