அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தீமிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் விழுந்து படுகாயமடைந்த பக்தர்கள்

துச்சேரியில் கோயில் தீமிதி திருவிழாவில் கரகத்துடன் அக்னி குண்டத்தில் விழுந்த பக்தர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 8:06 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் தீமிதி திருவிழாவில் கரகத்துடன் அக்னி குண்டத்தில் விழுந்த பக்தர்கள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அருகேயுள்ள சின்ன கோட்டக்குப்பம் பச்சைவாழியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், தீபாரத்தனையும் காண்பிக்கப்பட்டு வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. தீமிதி  திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செய்வதற்காக தீமிதித்தனர். முதலில் சக்தி கரக புறப்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் தீ மிதித்து வந்தனர். பின்னால் கரகம் எடுத்து வந்த பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது அவரது பின்னால் வந்த பக்தர்களுக்கும் தவறி விழுந்ததில், நெருப்பு பொறி பறந்து கூடியிருந்த 4 பக்தர்கள் மீது பட்டதால் பதட்டம் நிலவியது. 

உடனடியாக காயம் அடைந்தவர்களை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.