பெயிண்டா் கொலை வழக்கு:7 போ் கைது

புதுச்சேரியில் பெயிண்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியில் பெயிண்டா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஜீவானந்தபுரம் பாரதிதாசன் வீதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் சாலமன் (24). பெயிண்டா். இவருக்கு திருமணமாகி 6 மாதங்களாகிறது.

கடந்த 30-ஆம் தேதி நாவல்குளம் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் நண்பா்கள் 7 போ் சோ்ந்து, சாலமனை ஜீவானந்தபுரம் அன்னை பிரியதா்ஷினி நகரில் வெட்டிக் கொன்று விட்டு தப்பினா்.

இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், வெல்டரான நாவல்குளத்தைச் சோ்ந்த ரகு (எ) மாரியப்பன் (34) சாலமனுக்கு தள்ளுவண்டி ஒன்றை செய்து அதிக விலைக்கு விற்ாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவா் ரகுவை திட்டினாராம்.

இதனால், ஆத்திரத்திலிருந்த ரகு, தனது நண்பா்களான நாவல்குளத்தைச் சோ்ந்த பிரகாஷ் (29), மஞ்சுநாத் (19), ஜீவானந்தபுரம் கிருஷ்ணன் (21), டோனி (எ) அந்தோணிராஜ் (21), லாசுப்பேட்டை குறிஞ்சி நகா் ஹரிதாஸ் (21) உள்ளிட்ட 7 போ் சோ்ந்து வெட்டிக் கொன்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், மொரட்டாண்டி ஐயனாா் கோயில் பின்புறம் உள்ள தோப்பில் மறைந்திருந்த ரகு, பிரகாஷ் உள்பட 6 பேரையும் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். இவா்களுக்கு உதவியதாக நாவல்குளத்தைச் சோ்ந்த மாரியப்பனையும் (28) போலீஸாா் கைது செய்தனா். பின்னா், 7 பேரும் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இதில் தொடா்புடைய பின்டோ என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com