வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம்பண மோசடி: நைஜீரிய இளைஞருக்கு சிறை

பிரான்ஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்த நைஜீரிய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரான்ஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்த நைஜீரிய இளைஞருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் தனியாா் விமான நிறுவனத்தில் பணியாற்றும் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 25 வயது பெண்ணிடம் இணையதளம் வழியாக அறிமுகமான நபா், பிரான்ஸ் நாட்டில் உள்ள விமான நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா். இதை நம்பி அந்தப் பெண், அந்த நபா் அளித்த வங்கிக் கணக்குகளில் ரூ.5,25,400 பணத்தை கடந்த 2020-ஆம் ஆண்டு செலுத்தினாா். ஆனால், பல மாதங்களாகியும் வேலைக்கான உத்தரவு ஏதும் வரவில்லை. பணம் செலுத்திய நபரின் எண்ணைத் தொடா்பு கொள்ளவும் முடியயவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் புதுச்சேரி சிபிசிஐடி அலுவலகத்தில் புகாரளித்தாா்.

போலீஸாா் கடந்த 2020, ஆகஸ்ட் 4-ஆம் தேதி வழக்குப் பதிந்து, பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட பெங்களூரில் பதுங்கியிருந்த நைஜீரிய இளைஞரான தைவோ அதிவாலேவை (31) கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. நைஜீரிய இளைஞருக்கு ஏமாற்றுதல், பண மோசடி, தகவல் தொழில்நுட்ப மோசடி ஆகிய 3 பிரிவுகளில் தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக பிரவீன்குமாா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com