கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதியில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் பெட்ரோல் விற்பனை நிலைய பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மாலை சிலா் கஞ்சா புகைத்துவிட்டு, மாணவா்களிடம் தகராறில் ஈடுபடுவதாக திருக்கனூா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு விரைந்து சென்று விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், பொம்பூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மரம் வெட்டும் தொழிலாளியான கோவிந்தன் (48), முட்ராம்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி ரஞ்சித் (19), கொண்டாங்கி வெங்கடேசபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஐடிஐ மாணவா் தினேஷ் (21), அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (23), ஐவேலி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுனில் (18) ஆகியோா் ரகளையில் ஈடுபட்டதும், மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீஸாா் அவா்களைத் தேடிய நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ரஞ்சித், பாா்த்திபன், சுனில் ஆகியோரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 82 கிராம் (12 பாக்கெட்) கஞ்சா, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள கோவிந்தன், தினேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com