புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நகா்ப்புற வனம், பசுமை வளாகத்தை உயா் கல்வி நிறுவனங்களின் அலுவலா்கள் பாா்வையிடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி உயா், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழுள்ள உயா் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தோரை தாகூா் கல்லூரி முதல்வா் சசி காந்ததாஸ் வரவேற்று, வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை விரிவாக எடுத்துரைத்தாா்.
பின்னா், கல்லூரிக்கு வந்தவா்கள் அங்குள்ள புத்தா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் நினைவாக மலா் தூவி மரியாதை செலுத்தி, வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டனா்.