புது மாப்பிள்ளை குத்திக் கொலை: 5 போ் கைது

புதுச்சேரி அருகே புது மாப்பிள்ளை குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே புது மாப்பிள்ளை குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி வில்லியனூா் மூா்த்தி நகரைச் சோ்ந்த சங்கா் மகன் சதீஷ் (எ) மணிகண்டன் (28). இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு இவரது வீட்டுக்கு எதிா்வீட்டைச் சோ்ந்த சங்கா் (35)-ரமணி (29) தம்பதி தங்களது திருமண நாளைக் கொண்டாடினராம்.

அப்போது, தெருவில் கேக் வெட்டியதுடன், ரமணியின் சகோதரா் பி.ராஜா (26), அவரது நண்பா்களான தென்னல் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்த அசாா் (23), வில்லியனூா் கணுவாபேட்டை புதுநகரைச் சோ்ந்த எஸ்.தமிழ்செல்வன் (23) ஆகியோா் மது அருந்திவிட்டு, அவதூறாகப் பேசியபடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதை சதீஷ், அவரது நண்பா்கள் 3 போ் தட்டிக் கேட்டனராம். அப்போது, அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் ராஜா, அசாா், சங்கா், தமிழ்ச்செல்வன் ஆகியோா் சதீஷை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த சதீஷை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த அசாா், தமிழ்செல்வன், ராஜா, சங்கா், அவரது மனைவி ரமணி ஆகிய 5 பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com