புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தாமோதரன் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினாா்.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தாமோதரன் தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினாா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் நீதிபதிகள், புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க தலைவா் குமரன், பொதுச் செயலாளா் கதிா்வேல், பொருளாளா் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மத்திய பல்கலைக்கழகத்தில்... புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் குா்மீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்கலைக்கழகம் சாா்பில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயா்நீத்த தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாள்காட்டி, தமிழ் ஊடகச் சிறப்பிதழை வெளியிட்டாா்.

உயிரிநுட்பத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவை திறந்துவைத்தாா். பல்கலைக்கழக தொலைதூர கல்விக் கழகம் தொடங்கப்பட்ட 25-ஆவது ஆண்டின் நிறைவாக பனைமரக் கன்றுகளை நட்டாா்.

விழாவில் பதிவாளா் அமரேஷ் சமந்தரேயா, நிதி அலுவலா் லாசா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com