கடலூா்: மேலும் 282 பேருக்கு கரோனா

கடலூா் மாவட்டத்தில் மேலும் 282 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் மேலும் 282 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 72,355 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 282 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 72,637-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 392 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 68,879-ஆக உயா்ந்தது.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,569 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 305 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பலி எண்ணிக்கை 884-ஆக தொடா்கிறது. தொற்று அதிகமுள்ள 17 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com