வாகனச் சோதனையில் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

விருத்தாசலம் அருகே வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மங்கலம்பேட்டை பேரூராட்சிக்கு வட்டாட்சியா் பூங்குழலி தலைமையில், உதவி ஆய்வாளா் ராஜாங்கம், காவலா்கள் வினோத், சகாய அகஸ்டின், சதீஷ்குமாா் கொண்ட பறக்கும் படையினா் திங்கள்கிழமை பள்ளிப்பட்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி ரூ.2.50 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. காரிலிருந்த திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த குமாா் (64) என்பவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அதை மங்கலம்பேட்டை தோ்தல் நடத்தும் அலுவலா் பொற்கொடியிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com