புதுவையில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

புதுவை மாநிலத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,769 பேருக்கு பரிசோதனை செய்து வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 82, காரைக்கால் - 12, ஏனாம்-16 போ் என மொத்தம் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹேவில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

தற்போது மருத்துவமனைகளில் 13 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 389 பேரும் என 402 போ் சிகிச்சையில் உள்ளனா். 50 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்துள்ளனா்.

இதுவரை 22,91,191 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 19,35,016 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்தது. மாநிலத்தில் இதுவரை 17,43,336 (இரு தவணை, முன்னெச்சரிக்கை தவணை உள்பட) கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com