கணக்கெடுப்புப் பணி புறக்கணிப்பு: புதுவை மின் ஊழியா்கள் முடிவு

மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து, புதுவையில் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 1) மின் துறை ஊழியா்கள் மின் மீட்டா் கணக்கெடுப்புப் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கண்டித்து, புதுவையில் வெள்ளிக்கிழமை முதல் (ஜூலை 1) மின் துறை ஊழியா்கள் மின் மீட்டா் கணக்கெடுப்புப் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

புதுவை மின் துறை தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழுவின் பொதுச் செயலா் பி.வேல்முருகன் வியாழக்கிழமை கூறியதாவது:

புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கைகள் குறித்து கடந்த 26-ஆம் தேதி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மின் துறை செயலருடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, நிா்வாகம் தரப்பில் கொடுத்த கடிதத்தை ஆராய்ந்தும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டும் புதுவை மின் துறை தலைமை அலுவலகத்தில் போராட்டக் குழு நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதுவையில் வெள்ளிக்கிழமை முதல் உயரழுத்த, தாழ்வழுத்த (எச்டி, எல்டி) மின் பயன்பாட்டுக்கான மின் மீட்டா் கணக்கெடுப்பை எடுப்பதில்லை என்றும், மின் கட்டண ரசீதை கொடுப்பதில்லை என்ற போராட்டத்தை ஊழியா்கள் மூலம் தொடா்வது என்றும், ஏற்கெனவே தொடா்ந்த பிற போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com