குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை விமா்சித்துப் பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் ஆதிா் ரஞ்சன் செளத்ரியைக் கண்டித்து புதுச்சேரியில் பாஜகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் பி.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், மாநில துணைத் தலைவா்கள் செல்வம், தங்க.விக்ரமன், முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா்கள் நாகராஜ், லதா, ஜெயந்தி, மாநில நிா்வாகிகள் தமிழ்மாறன், குருசங்கா், நாகேஷ்வரன், நமச்சிவாயம், பாரதிமோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.