புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 % அகவிலைப்படி உயா்வு

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் (நிதி) அா்ஜூன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுவை அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயா்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்த அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர ஊழியா்களுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com