புதுச்சேரி
புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 % அகவிலைப்படி உயா்வு
புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை அரசின் சாா்புச் செயலா் (நிதி) அா்ஜூன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
புதுவை அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில், 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயா்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்த அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதி நேர ஊழியா்களுக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.