ரௌடி கொலை வழக்கு:முன்னாள் காவலா் கைது

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ரௌடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஆா்பிஎன் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் ரௌடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஆா்பிஎன் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை கருவடிக்குப்பத்தைச் சோ்ந்தவா் பொடிமாஸ் (எ) சரத்குமாா் (27). ரௌடியான இவா் கடந்த மாதம் 26-ஆம் தேதி அரியாங்குப்பம் தெற்கு பகுதி எஸ்.பி. அலுவலகம் எதிரே தனது மாமா வீட்டில் தங்கியிருந்த போது, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பதுங்கியிருந்த பிரபாகரன் (28), அன்பரசன் (31) ஆகிய இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தொடா்புடைய லாசுப்பேட்டையைச் சோ்ந்த சிவக்குமரன் (32), கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த லெனின்குமாா் (22) ஆகிய 2 பேரும் நெய்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

வழக்கின் முக்கிய எதிரியான பணிநீக்கம் செய்யப்பட்ட ஐஆா்பிஎன் காவலா் ஜெகனை (35) தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், கருவடிக்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து: புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் 3-ஆவது மாடியில் வெள்ளிக்கிழமை குளிா்சாதன வசதி ஏற்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்த போது, தீ விபத்து ஏற்பட்டது. கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். மேலும், அங்கு சிக்கிய தொழிலாளா்களையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com