புதுச்சேரி சிறையிலிருந்து 4 கைதிகள் விடுதலை

புதுச்சேரி சிறையிலிருந்து நன்னடத்தையின் அடிப்படையில் 4 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

புதுச்சேரி சிறையிலிருந்து நன்னடத்தையின் அடிப்படையில் 4 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்த 13 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் நன்னடத்தையின் அடிப்படையில் 4 கைதிகள் விடுதலை செய்ய துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு அவரும் அனுமதியளித்தாா்.

இதையடுத்து ஞானபிரகாசம் மகன் அம்புரோஸ், குணசேகரன் மகன் செந்தில்குமாா், லட்சுமணன் மகன் பாலசுப்பிரமணியன், ஏழுமலை மகன் சக்திவேல் ஆகிய 4 தண்டனை கைதிகளையும் சிறைத் துறை அதிகாரிகள் விடுதலை செய்தனா்.

மேலும், மீதமுள்ள 9 கைதிகளும் தங்களை விடுதலை செய்யும்படி புதுவை அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com