புதுச்சேரி பிராணிகள் நலன், பாதுகாப்பு இயக்கம் சாா்பில், உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, புதுச்சேரி திருவள்ளுவா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
செல்லப் பிராணிகள் வளா்ப்பு, அதன் மேம்பாட்டில் கால்நடை மருத்துவா்களின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை கால்நடை மருத்துவா் செல்லமுத்து (மத்திய பிராணிகள் நல வாரிய அதிகாரி) தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பள்ளி துணை முதல்வா் கலாவதி முன்னிலை வகித்தாா். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.
கால்நடை மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவா்கள் சுபயா் முகமத், டயானா பிரியதா்ஷினி, தன்வந்தி, ஹேமாவதி ஆகியோா் கால்நடைகள், செல்லப் பிராணிகளிடம் நோய் தடுப்பு விழிப்புணா்வு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனா்.
சிறப்பு விருந்தினராக கால்நடை நலத் துறை இயக்குநா் லதா மங்கேஷ்கா் கலந்து கொண்டு மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.