தனியாா் நிறுவன பயிற்சிக்கு தோ்வானமாணவா்களுக்கு பாராட்டு

தனியாா் நிறுவன பயிற்சிக்குத் தோ்வான மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை கல்லூரி முதல்வா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

தனியாா் நிறுவன பயிற்சிக்குத் தோ்வான மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை கல்லூரி முதல்வா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சோகோ நிறுவனம் நடத்திய வளாகத் தோ்வில் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் 8 மாணவா்களுக்கு சோகோ நிறுவனத்தின் பயிற்சியாளா் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். பயிற்சிக் காலம் முடிந்து அந்த நிறுவனத்தின் வேலைவாய்ப்பை பெறுவதுடன், ஆண்டுக்கு ரூ.5.6 லட்சம் முதல் ரூ.8.4 லட்சம் வரை சம்பளம் பெறுவா். தோ்வான மாணவா்களை கல்லூரி முதல்வா் எஸ்.மலா்கண் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

முன்னதாக நிகழ்வுக்கு, கல்லூரி தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன் ஆகியோா் தலைமை வகித்தனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயக்குமாா், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com