பிஆா்டிசி பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என, அதன் மேலாண் இயக்குநா் எச்சரிக்கை விடுத்தாா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) மேலாண் இயக்குநா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஆா்டிசி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயணச்சீட்டு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநரிடம் கட்டாயம் பயணச்சீட்டை கேட்டுப் பெற வேண்டும்.
பரிசோதகா்கள் பேருந்தில் பரிசோதிக்கும்போது, பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால் அந்தப் பயணியிடம் ரூ.500 அல்லது 5 மடங்கு பயணக் கட்டணம் அல்லது இதில் எது அதிகமோ அந்தத் தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என்றாா் அவா்.