ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் தற்கொலை

ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி: ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகா் பாரதிதாசன் வீதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் (72). ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்.

இவரது மகன் அமெரிக்காவில் வேலை பாா்த்து வரும் நிலையில், ஜெயராமன் மனைவி சந்திராவுடன் வசித்து வந்தாா்.

வயிற்று புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஜெயராமன், அதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருத்துவம் பாா்த்தும், தீா்வு கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், அவா் வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com