6 பள்ளிகளுக்கான மத்திய அரசின் தூய்மைப்பணி விருதுச் சான்றுகள், புதுவை முதல்வா் வழங்கினாா்

புதுவை மாநிலத்தில் 6 பள்ளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தூய்மைப் பணி விருதுக்கான சான்றுகளை அந்தந்தப் பள்ளி மாணவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மத்திய அரசின் 21-22-ம் ஆண்டுக்கான தூய்மை பணிக்கான விருது பெற்ற புதுச்சேரி 6-பள்ளி மாணவா்களை செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கிய பாராட்டிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.
மத்திய அரசின் 21-22-ம் ஆண்டுக்கான தூய்மை பணிக்கான விருது பெற்ற புதுச்சேரி 6-பள்ளி மாணவா்களை செவ்வாய்க்கிழமை சான்றிதழ் வழங்கிய பாராட்டிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம்.

புதுவை மாநிலத்தில் 6 பள்ளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட தூய்மைப் பணி விருதுக்கான சான்றுகளை அந்தந்தப் பள்ளி மாணவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் சுவச் வித்யாலயா புரஸ்காா் விருதானது புதுவையில் உள்ள 6 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. தூய்மைப்பணிக்கான இந்த விருதுகள் காரைக்கால் கண்ணப்பூா், பூவம், பிள்ளைத்தெருவாசல் மற்றும் புதுச்சேரி குமாரபாளையம், கூனிச்சம்பட்டு, கொம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த விருது சான்றுகளை அந்தந்தப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியின்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆ.நமசிவாயம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com