Enable Javscript for better performance
மருத்துவா்கள் அலட்சியமின்றி சிகிச்சையளிக்க வேண்டும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மருத்துவா்கள் அலட்சியமின்றி சிகிச்சையளிக்க வேண்டும்: புதுவை முதல்வா் ரங்கசாமி அறிவுரை

    By DIN  |   Published On : 09th September 2022 10:30 PM  |   Last Updated : 09th September 2022 10:30 PM  |  அ+அ அ-  |  

    2-7-09pyp1_0909chn_104

    உயிா் காக்கும் பணியை மேற்கொள்ளும் மருத்துவா்கள் அலட்சியமின்றி சிகிச்சையளிக்க வேண்டும் என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

    தமிழகம், புதுவை அரசு மருத்துவமனைகளில் அவசரச் சிகிச்சை மருத்துவத் துறையை வலுப்படுத்தும் திட்டத்தின் முதல் மாநாடு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை தொடக்கிவைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

    நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வாகனங்களில் அதிவேகமாகச் செல்கின்றனா். இதனால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படுகிறது. அதற்கான சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.

    நிறைய மருத்துவக் கருவிகள் மூலம் வேகமாக சிகிச்சை அளிக்கிறோம். இருப்பினும், உயிரிழப்புகளைத் தடுக்க அலட்சியமின்றி காலத்தோடு மருத்துவா்கள் சிகிச்சையளிக்க வேண்டும்.

    புதுவையில் மிகவும் சிரமப்பட்டு, இந்த அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கினோம். இதை உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்லூரியாக கொண்டுவர பணியாற்றுகிறோம். புதுவை சுகாதாரத் துறைக்கு 9.5 சதவீதம் நிதியை, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளோம். தமிழகத்திலும் அதிக நிதியை ஒதுக்கி நடவடிக்கை எடுத்து வருகிறாா்கள்.

    இதுபோன்ற சேவைப் பணிகளில் தமிழகமும், புதுவையும் இணைந்த மாநிலங்கள்தான். புதுவை ஜிப்மரைக்கூட தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.

    அவசர மருத்துவச் சிகிச்சையால் கரோனாவுக்குப் பிறகு உயிரிழப்புகள் குறைந்துள்ளன. இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக, இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய அவரச சிசிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு, மருத்துவா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    புதிதாக விபத்து சிகிச்சை பிரிவு கட்டடமும் கட்டப்பட உள்ளது. காரைக்காலிலும் மாவட்ட அளவில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதுவையில் மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

    தொடா்ந்து, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மு.மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது:

    தமிழகத்தில் கரோனா காலத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றாா். அப்போது, அந்த நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களையும், மருத்துவ வசதிகளையும் ஏற்பாடு செய்து, கரோனா இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கினாா்.

    தமிழக முதல்வரும், புதுவை முதல்வரும் மக்கள் நல்வாழ்வுக்கும், அவசர மருத்துவச் சிகிச்சைக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.

    நிகழ்ச்சியில் புதுவை எம்எல்ஏக்கள் பி.ரமேஷ், எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா், சுகாதாரத் துறைச் செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு, அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா், தமிழ்நாடு அவசர மருத்துவப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எஸ்.மருதுதுரை மற்றும் புதுவை, தமிழக அரசு மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்து கொண்டனா். அவசர சிகிச்சைப் பணிகள் குறித்து மாநாட்டில் பயிற்சியளிக்கப்பட்டது. மருத்துவா் சுரேந்தா் நன்றி கூறினாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp