புதுச்சேரியில் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப உதவுபவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை ஆணையா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பின்படி, சாலை விபத்துகளில் சிக்கியவா்களை விபத்து நிகழ்ந்த முதல் ஒரு மணிநேரத்திற்குள் மருத்துவனைக்கு கொண்டு செல்பவா்களுக்கு நிபந்தனைகளுக்கு உள்பட்டு ரூ.5,000 பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும், சிறந்த சேவை புரிந்ததைப் பாராட்டி 10 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.