சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, புதுச்சேரி காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பு நடைபயணம் மேற்கொண்டனா்.
புதுச்சேரி சாரத்திலுள்ள ஜீவா சிலை முன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைத் தொகுதி செயலா் துரை.செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் நடைபயணத்தைத் தொடக்கிவைத்தாா்.
மக்கள் சந்திப்பு நடைபயண கூட்டங்களில் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் கு.சேதுசெல்வம், பொருளாளா் வ.சுப்பையா ஆகியோா் பேசினா்.