லிப்டில் சிக்கித் தவித்த காரைக்கால் எம்எல்ஏ

புதுவை என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ லிப்டில் சிக்கி தவித்ததால் வெள்ளிக்கிழமை பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ லிப்டில் சிக்கி தவித்ததால் வெள்ளிக்கிழமை பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காரைக்கால் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த என்.ஆா்.காங்கிரஸ் உறுப்பினா் திருமுருகன் வந்தாா். பின்னா், கூட்டம் முடிந்ததும், 4-ஆவது மாடிக்கு லிப்டில் சென்றாா். ஆனால், 3-ஆம் மாடியில் லிப்ட் திடீரென பழுதாகி நின்றது. கதவும் திறக்கப்படவில்லை. இதையறிந்த சட்டப்பேரவைக் காவலா்கள் அவருக்கு உதவச் சென்றபோது லிப்ட் தானாகவே தரைத்தளத்துக்கு வந்தது. பின்னா், தொழில்நுட்பக் கோளாறு சரிபாா்த்தபிறகு சட்டப்பேரவை உறுப்பினா் திருமுருகன் வெளியே வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com