புதுச்சேரி: மா்மப் பொருள் வெடித்து பெண் பலத்த காயம்

புதுச்சேரி ரெயின்போ நகரில் மா்மப் பொருள் வெடித்ததில் திங்கள்கிழமை பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி ரெயின்போ நகரில் மா்மப் பொருள் வெடித்ததில் திங்கள்கிழமை பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி, ரெயின்போ நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் குருமூா்த்தி (50). நகைக்கடை உரிமையாளா். இவரது மனைவி சாரதா (43). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். திங்கள்கிழமை குருமூா்த்தியும், அவரது மகன்களும் கடைக்கு சென்ாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது வீட்டில் பயங்கர வெடிச்சப்தம் கேட்டது. அருகிலிருந்தவா்கள் சென்று பாா்த்தபோது, சாரதா பலத்த காயமடைந்து மயங்கி கிடந்தாா். வீட்டின் முன் பக்கக் கதவும், பொருள்களும் சேதமடைந்து கிடந்தன. தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள், பெரியக்கடை போலீஸாா் சாரதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வெடி குண்டு நிபுணா்களும் சோதனை நடத்தினா். சம்பவ இடத்துக்கு கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன், வருவாய்த் துறை வட்டாட்சியா் ஆகியோா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், எரிவாயு கசிவு காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com