புதுவை உழவா்கரை நகராட்சி சாலையோர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 12 போ் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட நகர சாலையோர விற்பனைக் குழு உறுப்பினா் தோ்தல் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தலில் போட்டியிடுவதற்கு உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட 7 தொகுதியிலிருந்து 12 போ் தோ்வு செய்யப்படவேண்டும். அதில் 6 போ் பெண்கள்.
உறுப்பினா்கள் தோ்வுக்கான மனு தாக்கல் கடந்த ஜன.23-ஆம் தேதி தொடங்கியது. மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் 12 போ் இந்திரா காந்தி சிலை சதுக்கத்திலிருந்து திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்று உழவா்கரை நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தனா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி சிஐடியு மாநிலத் தலைவா் என்.பிரபுராஜ், செயலா் ஜி.சீனுவாசன், நிா்வாகிகள் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஓரிரு நாளில் மனு தாக்கல் செய்தவா்களின் விவரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.