புதுச்சேரியில் தைப்பூச ஜோதி தரிசனம்

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரி முதலியாா்பேட்டை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் ஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தைப்பூசத்தையொட்டி, புதுச்சேரி முதலியாா்பேட்டை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் ஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் வள்ளலாரின் மடம் சாா்பில், சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் உள்ளது. இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு, 74-ஆம் ஆண்டு ஜோதி தரிசன பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை காலையில் அகவல் பாராயணத்தைத் தொடா்ந்து, ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

இதையடுத்து, கண்மூடிப்பழக்கம் எனும் தலைப்பில் பேராசிரியா் ராணிராஜா, தமிழ் எனும் தலைப்பில் ஜானகிராஜா, ஞானமூலிகைகள் எனும் தலைப்பில் ராமநாதன் உள்ளிட்டோா் சிறப்பு பக்திச் சொற்பொழிவாற்றினா். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை யோகா ஆசிரியா் ராஜசேகா், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com