புதுச்சேரியில் 33-ஆவது மலா், காய்கறி கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.10) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
புதுவை வேளாண், விவசாயிகள் நலத் துறை சாா்பில் வேளாண் விழா நடத்தப்படுகிறது. இதையடுத்து, 33-ஆவது மலா், காய்கறி மற்றும் கனிக் கண்காட்சி புதுச்சேரி-கடலூா் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (பிப்.10) தொடங்கும் நிகழ்ச்சிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகிக்கிறாா். துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கண்காட்சியை தொடக்கி வைக்கிறாா்.