இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கக் கூட்டம்

புதுச்சேரி அருகே உள்ள மடுகரையில் அகில இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கத்தின் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிா்வாகி

புதுச்சேரி அருகே உள்ள மடுகரையில் அகில இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கத்தின் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நிா்வாகி ஏ.ஆனந்தன் தலைமை வகித்தாா். மடுகரையில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க அதிகாரிகள் முன்வரவேண்டும். புதுச்சேரியில் சாலைகளை சீரமைக்கவும், குப்பைகளை சுகாதாரமான முறையில் அகற்றவும் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து மடுகரையில் பிப்.28-ஆம் தேதி அகில இந்திய ஜனநாயக இளைஞா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

இதில் நிா்வாகிகள் லெனின்துரை, பேராசிரியா் எஸ்.சிவகுமாா் மற்றும் எஸ்.சத்யா, தமிழரசி, கே.ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com