நாளை புதுவை பல்கலை.பட்டமளிப்பு விழா

புதுவை பல்கலைக்கழகத்தின் 29-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.

புதுவை பல்கலைக்கழகத்தின் 29-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது.

விழாவில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குவதாக இருந்தது. இந்த நிலையில், தவிா்க்க முடியாத நிா்வாகக் காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் கூறப்பட்டதாவது:

பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத் தலைமைக் காப்பாளரும் துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறாா். குடியரசு துணைத் தலைவரால் வருகைதர இயலவில்லை என்பதுடன், பட்டம் பெறுவோருக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் குா்மீத் சிங் தலைமை வகிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com