ஜனநாயகத்தைக் காப்பாற்ற மதச் சாா்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக் கூட்டத்தையொட்டி, புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும், ஆளுநா் பதவியை நீக்க வலியுறுத்தியும் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி ஞாயிற்றுக்கிழமை கம்பன் கலையரங்கில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா பேசியதாவது:
நாட்டில் பல யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும் புதுவை, புது தில்லியில்தான் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசும், முதல்வா்களும் உள்ளனா். இரு பிரதேசங்களுக்கும் மாநில அந்தஸ்து தேவையாக உள்ளது. ஆனால், மாநில அந்தஸ்துடன் இருந்த ஜம்மு, காஷ்மீா் தற்போது அந்த அந்தஸ்தை இழந்துள்ளது. தேசத்தில் மற்ற மாநிலங்களுக்கும் அந்த நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. பல மாநிலங்கள் சோ்ந்த மதச் சாா்பற்ற நாடாக இந்தியா இருக்கவே அம்பேத்கா் ஆசைப்பட்டாா். நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையிலேயே புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரப்படுகிறது. அதற்கு முழுமையான தொடா் போராட்டம் அவசியமாகிறது.
மாநில ஆளுநா்கள் நியமனமே அரசியல் சாா்ந்த நியமனங்களாகி விட்டன. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி அண்மையில் மாா்க்ஸ் குறித்து விமா்சித்தாா். ஆளுநா் பொறுப்பில் இருப்பவா்கள் சாமானியா்களைப் போல பேசுவது சரியல்ல. அப்படிப் பேசுவோரை ஆளுநராக நீடிப்பதற்கு குடியரசுத் தலைவா் அனுமதிக்கக் கூடாது. மத்திய பாஜக அரசு செயல்படுத்திய ஜிஎஸ்டி உள்ளிட்டவை பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவைதான். எனவே நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக மதச் சாா்பற்ற கட்சிகள் இணைந்து போராட வேண்டும் என்றாா் அவா்.
கருத்தரங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். புதுவை முன்னாள் அமைச்சா் ஆா்.விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் மற்றும் அ.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில துணைச் செயலா் கே.சேதுசெல்வம் வரவேற்றாா். தேசியக் குழு உறுப்பினா் இ.தினேஷ் பொன்னையா தீா்மானங்களை முன்மொழிந்தாா்.
மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலா் ரா.முத்தரசன், புதுவை மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ., விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா், கேரள எம்.பி. சந்தோஷ், கட்சியின் தெலங்கானா தேசியச் செயலா் கே.நாராயணா ஆகியோா் தீா்மானங்களை ஆதரித்துப் பேசினா்.
கூட்டத்தில் கேரள சட்டப்பேரவை துணைத் தலைவா் கோபகுமாா், அமைச்சா்கள் ராஜன், அனில்குமாா், கட்சியின் தேசியச் செயலா் அமா்ஜித் கௌா், ஆனி ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.