புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாக சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை பேரணியாக சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து, புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாகக் கூறியும், புதுச்சேரி மின் துறையை தனியாா்மயமாக்கக் கூடாது என்றும் மாா்க்சிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மாா்க்சிஸ்ட் சாா்பில் மகாத்மா காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பிலிருந்து பேரணி நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் சீனுவாசன் பேரணியைத் தொடங்கிவைத்தாா். புதுச்சேரி நகரச் செயலா் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற பேரணி அஜந்தா போக்குவரத்து சந்திப்பு வழியாக முத்தியால்பேட்டை சந்தைப் பகுதியை அடைந்ததும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் புதுவை மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் ராமச்சந்திரன், கலியமூா்த்தி, பிரபுராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com